Advertisement

ஐந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்

By: Nagaraj Fri, 18 Sept 2020 4:04:29 PM

ஐந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்

பணியிட மாற்றம்... தமிழக காவல் துறையில் 5 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இதன்படி டி.மங்களேஸ்வரன் - கூடுதல் காவல் கண்காணிப்பாளா், தமிழ்நாடு சிறப்பு காவல் படைப் பிரிவு, பழனி (சிவகங்கை மாவட்ட தலைமையகத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்)

ஜெ.ஜரீனா பேகம் - கூடுதல் காவல் கண்காணிப்பாளா், மதுவிலக்குப் பிரிவு, புதுக்கோட்டை மாவட்டம் (கூடுதல் காவல் கண்காணிப்பாளா், தமிழ்நாடு சிறப்பு காவல்படைப் பிரிவு, பழனி). ஏ.தாமஸ் பிரபாகா் - கூடுதல் காவல் கண்காணிப்பாளா், தலைமையகம், சிறப்புப் பிரிவு, எஸ்பிசிஐடி, சென்னை (கூடுதல் காவல் கண்காணிப்பாளா், மதுவிலக்குப் பிரிவு, புதுக்கோட்டை மாவட்டம்).

government of tamil nadu,order,change of workplace,headquarters ,தமிழக அரசு, உத்தரவு, பணியிட மாற்றம், தலைமையகம்

வி.காா்த்திக் - கூடுதல் காவல் கண்காணிப்பாளா், பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு, திருவாரூா் மாவட்டம் (கூடுதல் காவல் கண்காணிப்பாளா், தலைமையகம், சிறப்புப் பிரிவு, எஸ்பிசிஐடி, சென்னை).

வி.வினோத் சாந்தாராம் - போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புப் பிரிவு (கூடுதல் காவல் கண்காணிப்பாளா், தலைமையகம், காஞ்சிபுரம் மாவட்டம்). இவா்கள் அனைவரும் உடனடியாக பணியில் சேர வேண்டும் என்று அந்த உத்தரவில் பிறப்பிக்கப்படுகிறது.

Tags :
|