Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு சார்பில் கொள்முதல் செய்யப்படும் மின்சார பேருந்துகளில் பிரச்சினைகள் இருக்காது ..போக்குவரத்து அமைச்சர்

அரசு சார்பில் கொள்முதல் செய்யப்படும் மின்சார பேருந்துகளில் பிரச்சினைகள் இருக்காது ..போக்குவரத்து அமைச்சர்

By: vaithegi Sat, 23 Sept 2023 10:34:24 AM

அரசு சார்பில் கொள்முதல் செய்யப்படும் மின்சார பேருந்துகளில் பிரச்சினைகள் இருக்காது ..போக்குவரத்து அமைச்சர்

சென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் போக்குவரத்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் கூறியதாவது:- தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உலகளவில் மின்சார பேருந்துகள் பரவலாக இயக்கப்பட்டு வருகின்றன.

இதனை அடுத்து அண்மையில் ஒரு தனியார் பேருந்துதீப்பற்றியது. இதுதொடர்பாக ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளோம்.

transport minister,electric bus,procurement ,போக்குவரத்து அமைச்சர், மின்சார பேருந்து,கொள்முதல்

தமிழக அரசு சார்பாக கொள்முதல் செய்யப்படும் பேருந்துகள் முழுமையாகப் பரிசோதிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்துதான் வாங்கப்படும். எனவே அதில் எந்த விதமான பிரச்சினையும் இருக்காது.

வாடகை வாகனங்களைக் கண்காணிக்கும் பணிகளை போக்குவரத்துத் துறை தொடர்ந்து மேற்கொள்ளும். நெடுஞ்சாலை உணவகங்களில் சிறப்பான சேவை அளிக்க வேண்டும் என்பதுபொதுமக்களின் கோரிக்கையாகவுள்ளது. ஆனால் அதேநேரம், அதிகாரிகளிடம் உணவக உரிமையாளர்கள் முன்வைத்த கோரிக்கையின்படி கழிப்பறைக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags :