ஆஸ்திரேலியாவில் சிக்கியிருந்த 98 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்
By: Nagaraj Fri, 19 June 2020 3:48:35 PM
நாடு திரும்பினர்... கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவில் சிக்கியிருந்த 98 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்.
ஆஸ்திரேலியாவில் மெல்போன் நகரிலிருந்து இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மெல்போன் நகரிலிருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.605 என்ற விசேட விமானம் மூலம் இன்று அதிகாலை இவர்கள் நாட்டை வந்தடைந்தனர்.
இவ்வாறு வருகை தந்த இலங்கையர்களில் பெரும்பாலானவர்கள் ஆஸ்திரேலியாவில் உயர்
கல்வியைத் தொடர்வதற்காகச் சென்றிருந்தவர்களாவர். இவர்கள் அனைவரும்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு
உட்படுத்தப்பட்டனர்.
பி.சி.ஆர். பரிசோதனை முடிவு கிடைக்கப் பெறும்
வரை அவர்கள் அனைவரும் விமான நிலையத்தை அண்மித்த ஹோட்டலொன்றில் தற்காலிகமாக
தங்க வைக்கப்பட்டுள்ளனர்.