மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட்டுக்கு பயணத் தடை நீட்டிப்பு
By: Nagaraj Wed, 18 Jan 2023 10:56:23 AM
கொழும்பு: பயணத்தடை நீட்டிப்பு... மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு நேற்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே எதிர்வரும் பிப்ரவரி மாதம் 16ஆம் திகதி வரை குறித்த தடை நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய போது, அஜித் நிவார்ட் கப்ரால் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தி இந்த தனிப்பட்ட மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :
crime |