கொரோனா கட்டுப்பாடுகளால் அந்தமானில் தவிக்கும் பயணிகள்
By: Nagaraj Sun, 27 Nov 2022 4:03:47 PM
அந்தமான்: அவதிப்படும் பயணிகள்... இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன. ஆனால் சில யூனியன் பிரதேசங்கள் விமானப் பயணிகளுக்கு கொரோனா காலக் கட்டுப்பாடுகளை நடைமுறையில் வைத்திருப்பதாக தகவல்கள் உள்ளன.
அந்தமான் மற்றும் நிகோபாரில் உள்ள போர்ட் பிளேயருக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா காலக் கட்டுப்பாடுகள் இன்னும் நடைமுறையில் உள்ளன.
போர்ட் பிளேயருக்கு விமானத்தில் பயணிக்கும் பயணிகள், தடுப்பூசி
போடப்படாவிட்டால், பயணம் செய்த 48 முதல் 96 மணி நேரத்திற்குள் கொரோனா
பரிசோதனை ‘நெகட்டிவ்’ அறிக்கையை (RTPCR) எடுக்க வேண்டும்.இல்லையெனில்,
அவர்கள் அங்கு இறங்கியதும், RDPCR இதை தெற்கு அந்தமான் துணை ஆணையர் சுனில்
அஞ்சிபாகா உறுதிப்படுத்தியுள்ளார்.
யூனியன்
பிரதேசமான லடாக்கில் உள்ள லே நகரிலும் இதே கட்டுப்பாடு பின்பற்றப்படுகிறது
என்று லே நகர சுகாதார இயக்குநர் டாக்டர் மோடப் டோர்ஜே உறுதிப்படுத்தினார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், சுற்றுலா பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை
நடத்தி வருகிறோம். கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பிறகும், இதுபோன்ற
கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பது பயணிகளை பாதிக்கிறது.