Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு வரும் பயணிகள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும்

அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு வரும் பயணிகள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும்

By: vaithegi Wed, 29 June 2022 4:07:40 PM

அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு வரும் பயணிகள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும்

உதகை: உதகையில் இந்தாண்டு நடைபெற்ற 124 ஆவது மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தற்போதும் தமிழகத்தில் அவ்வப்போது மழைப்பொழிவு இருந்து வருவதால் உதகையில் பூக்கள் அதிக அளவில் பூத்து குலுங்கி கொண்டிருக்கிறது.

இதனால் இந்த மாதம் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்துடன் தமிழகத்தில் கொரோனா பரவலும் மிக அதிகரித்து வருவதால் உதகைக்கு சுற்றுலா வரும் பயணிகளை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

mask,tourist sites ,மாஸ்க் ,சுற்றுலாத் தலங்கள்

உதகை தாவரவியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இன்று முதல் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து தான் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாமல் உதகை தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வந்தால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை எனவும் தோட்டக்கலைத்துறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|