Advertisement

தோகூரில் மரக்கன்று நடும் விழா

By: Nagaraj Fri, 11 Aug 2023 6:27:20 PM

தோகூரில் மரக்கன்று நடும் விழா

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் தோகூர் நாகவள்ளி காப்புக்காடு பகுதியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

தமிழ்நாடு வனத்துறை தஞ்சாவூர் வனக்கோட்டம் சார்பில் தமிழக முதல்வரின் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் அரசு நிலங்களில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா ஆகியவை தோகூர் பகுதியில் நடைபெற்றது.

saplings,farmers,free,thokur,said thanks ,மரக்கன்றுகள், விவசாயிகள், இலவசம், தோகூர், நன்றி கூறினார்

ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து வரவேற்றார். தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி தலைமை வகித்தார். பூதலூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கல்லணை செல்லக்கண்ணு முன்னிலை வகித்தார்.

திருவையாறு எம்எல்ஏ துரை. சந்திரசேகரன் மரக்கன்றுகளை நட்டும், விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை இலவசமாக வழங்கியும் சிறப்புரையாற்றினார். வனச்சரக அலுவலர் ரஞ்சித் நன்றி கூறினார்.

Tags :
|
|