தஞ்சை அருகே பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா
By: Nagaraj Thu, 29 Dec 2022 10:50:08 PM
தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், கவின்மிகு தஞ்சை இயக்கம் மற்றும் லயன்ஸ் கிளப் ஆகியவை சார்பில் ஊருக்கு ஒரு வனம் திட்டத்தின் கீழ் மரக்கன்றை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நட்டார்.
தஞ்சை அருகே வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கம், லயன்ஸ் கிளப் ஆகியவை சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு லயன்ஸ் கிளப் தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் கருணாநிதி முன்னிலை வகித்தார். ராமச்சந்திரன் வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
கலந்துகொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றை நட்டார். மகாராஜா சில்க்ஸ்
உரிமையாளர் முகமது ரபி, கவின்மிகு தஞ்சை இயக்கம் தலைவர் ராதிகா மைக்கேல்,
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட கல்வி அலுவலர்
கோவிந்தராஜ், பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், பெண்கள்
மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம், ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பார்த்தசாரதி ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினர்.
இதில் பேரூராட்சி உறுப்பினர்கள் சத்யா
ஆறுமுகம், பரிமளா வினோத் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முதுகலை
ஆசிரியர் சங்கர் நன்றி கூறினார்.