மும்பை தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
By: Nagaraj Sun, 27 Nov 2022 6:29:36 PM
புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட்டில் அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் பிரதமர் மோடி, “மும்பை தீவிரவாத தாக்குதலின் ஆண்டை அனுசரிக்கிறோம்.14 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசியலமைப்பு மற்றும் சிவில் உரிமைகள் தினத்தை நாடு கொண்டாடும் போது மனித குல விரோதிகள் இந்தியாவில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலை நடத்தினர். இதில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்,” என்றார்
Tags :
anjali |