Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திரிபுரா .. துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு விடுமுறை

திரிபுரா .. துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு விடுமுறை

By: vaithegi Tue, 27 Sept 2022 4:12:37 PM

திரிபுரா   ..  துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு  விடுமுறை

திரிபுரா : ஒவ்வொரு மாநில அரசுகளும் புதிய ஆண்டு பிறக்கும் முன்பாக, அந்த குறிப்பிட்ட வருடத்திற்கான விடுமுறை மற்றும் வேலை நாட்களை முன்னதாக அறிவித்து விடும். அதன்படி தான் அந்த ஆண்டு முழுவதும் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் செயல்படும்.

இதனை அடுத்து அரசுகள் தனது ஊழியர்களுக்காக பல சிறப்பு திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்து அவர்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறது. அந்த வகையில், திரிபுரா மாநில அரசு, தனது ஊழியர்களுக்கு துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு 9 நாட்கள் விடுமுறையை அறிவித்துள்ளது.

holiday,tripura,durga puja festival ,விடுமுறை,திரிபுரா   ,துர்கா பூஜை பண்டிகை

திரிபுரா அரசு ஊழியர்களுக்கான 9 நாள் விடுமுறை அக்டோபர் 2ஆம் தேதி முதல் தொடங்குகிறது. திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா இது குறித்து, அரசு ஊழியர்களுக்கு, துர்கா பூஜை கொண்டாட்டங்களுக்கு முன்னதாக 4 நாட்கள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.

ஆனால் ஊழியர்கள் இதனால் மகிழ்ச்சி அடையவில்லை. எனவே, விடுமுறை நாட்களை 9 நாட்களாக அறிவித்ததாக கூறினார். துர்கா பூஜை இந்திய கலாச்சாரத்தின் ஒரு பிரிக்க முடியாத பண்டிகையாக உருவெடுத்துள்ளது. பலதரப்பட்ட மக்கள் இந்த பண்டிகையை பாரம்பரியமாக கொண்டாடி வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :