Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்வது குறித்து இங்கிலாந்து ராணியுடன் டிரம்ப் ஆலோசனை

கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்வது குறித்து இங்கிலாந்து ராணியுடன் டிரம்ப் ஆலோசனை

By: Karunakaran Thu, 02 July 2020 2:04:09 PM

கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்வது குறித்து இங்கிலாந்து ராணியுடன் டிரம்ப் ஆலோசனை

சீனாவில் தோன்றிய கொரோனா தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 27 லட்சத்தை கடந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா காரணமாக ஒரு லட்சத்து 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. நேற்று மதியம் நிலவரப்படி, இங்கிலாந்தில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 159 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இங்கிலாந்தில் பலி எண்ணிக்கை 43 ஆயிரத்து 815 ஆக இருந்தது.

coronavirus,trump,queen of england,consulting ,கொரோனா வைரஸ், டிரம்ப், இங்கிலாந்து ராணி, ஆலோசனை

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்வதில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். இதுகுறித்த தகவலை வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜட் டீரே தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜட் டீரே இதுகுறித்து கூறுகையில், உலகளாவிய பொருளாதாரங்களை மீண்டும் திறப்பது குறித்தும் ஜனாதிபதி டிரம்பும், ராணி 2ம் எலிசபெத்தும் ஆலோசனை நடத்தியதாகவும், இரு நாடுகளின் உறவும் முன்பைவிட வலுவாக இருப்பதை இரு நாட்டுத் தலைவர்களும் உறுதி செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|