Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை எதிர்த்து பேரணி நடத்த டிரம்ப் முடிவு

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை எதிர்த்து பேரணி நடத்த டிரம்ப் முடிவு

By: Karunakaran Tue, 10 Nov 2020 08:14:43 AM

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை எதிர்த்து பேரணி நடத்த டிரம்ப் முடிவு

அமெரிக்காவில் கடந்த 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 4 நாட்களாக நடைபெற்றது. இதில் ஜனாதிபதி வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி டிரம்ப்புக்கும் ஜோ பைடனுக்கும் இடையே இழுபறி நீடித்து வந்தது. ஆரம்பம் முதலே முன்னணியில் இருந்த ஜோ பைடன் 279 வாக்குகள் பெற்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந்தேதி அமெரிக்காவில் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை டிரம்பே ஜனாதிபதியாக இருப்பார். ஆனால் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து பிடிவாதமாக உள்ளார். தேர்தல் இன்னும் முடியவில்லை என்றும் தேர்தல் தொடர்பான தனது சட்ட போராட்டம் தொடரும் எனவும் அவர் கூறிவருகிறார்.

trump,rally,presidential election results,america ,டிரம்ப், பேரணி, ஜனாதிபதி தேர்தல் முடிவுகள், அமெரிக்கா

ஜார்ஜியா, அரிசோனா, பென்சில்வேனியா ஆகிய மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாகவும் அந்த மாகாணங்களில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் எனவும் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். இதனால், வெள்ளை மாளிகை பணியாளர்களை நியமித்தல், அதிகார மாற்றத்திற்கான செலவினம் உள்ளிட்டவற்றை மேற்கொள்வதில் பைடன் தரப்புக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு, ஜனநாயக ரீதியில் அதிகார மாற்றத்தை எந்தவித இடையூறும் இல்லாமல் நடத்திக்கொடுக்க ஜோ பைடனுக்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. டிரம்பின் குடும்பத்திலும் சிலர் இதனை வலியுறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், டிரம்பின் நட்பு வட்டாரத்தில் உள்ள சில முக்கிய நபர்கள் அவரது நிலைப்பாடு மிகவும் சரியானது என்றும் அவர் தனது சட்ட போராட்டத்தை தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் டிரம்ப் தனது நிலைப்பாட்டில் விடாபிடியாக உள்ளார்.


Tags :
|
|