Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிபர் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள இந்திய வம்சாவளியினருக்கு ட்ரம்ப் நன்றி

அதிபர் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள இந்திய வம்சாவளியினருக்கு ட்ரம்ப் நன்றி

By: Nagaraj Sun, 28 June 2020 09:36:20 AM

அதிபர் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள இந்திய வம்சாவளியினருக்கு ட்ரம்ப் நன்றி

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில், தனக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள இந்திய வம்சாவளி மக்களுக்கு அதிபர் டொனால்டு ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் தற்போது அதிபராக பதவி வகிக்கிறார். இவர், நவம்பர் மாதம் 3-ம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் 2-வது முறையாகப் போட்டியிடுகிறார். இதற்கு அமெரிக்காவின் பல மாகாணங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரமும் செய்து வருகிறார்.

இந்நிலையில், 'ட்ரம்ப் விக்டரி இந்தியன்-அமெரிக்கன் பைனான்ஸ் கமிட்டி'யின் துணை தலைவர் அல் மேசன், ட்ரம்ப்புக்கு ஆதரவாக இந்திய வம்சாவளியினரை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவர் நடத்திய ஆய்வில், அமெரிக்காவின் பல முக்கிய மாகாணங்களில், இந்திய வம்சாவளியினர் ட்ரம்ப்புக்கு ஆதரவாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

president trump,indian origin,support,thank you,election ,அதிபர் ட்ரம்ப், இந்திய வம்சாவளியினர், ஆதரவு, நன்றி, தேர்தல்

இதுகுறித்து வெள்ளை மாளிகை பத்திரிகை துணை செயலாளர் சாரா மேத்யூஸிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சாரா கூறியதாவது:

அமெரிக்காவின் பல மாகாணங்களில் பிரச்சாரத்தின் போது லட்சக்கணக்கான இந்திய வம்சாவளியினர் ட்ரம்ப்புக்கு ஆதரவளித்துள்ளனர். அதற்காக அதிபர் ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். குறிப்பாக மிச்சிகன், புளோரிடா, டெக்சாஸ், பென்சில்வேனியா, வெர்ஜினியா போன்ற மாகாணங்களில் ட்ரம்ப்புக்கு இந்திய வம்சாவளியினரிடம் அதிக வரவேற்பு கிடைத்தது.

அமெரிக்க பொருளாதாரம், கலாச்சார மேம்பாடு ஆகியவற்றில் இந்திய வம்சாவளியினர் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி உள்ளனர். அதை அதிபர் ட்ரம்ப் அங்கீகரித்துள்ளார். அமெரிக்க மக்கள் அனைவருக்கும் நல்வாழ்க்கை, சுகாதாரம், சுதந்திரம் ஆகியவை கிடைக்க ட்ரம்ப் தொடர்ந்து போராடி வருகிறார். இவ்வாறு சாரா கூறினார்.

அமெரிக்காவின் மாகாணங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப அந்தந்த மாகாணங்களில் மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர். 'எலெக்டர்கள்' என்று அவர்கள் அழைக்கப்படுகின்றனர். இந்தப் பிரதிநிதிகள் கொண்ட அமைப்புதான் தேர்தல் அவை எனப்படுகிறது. அதிபர் தேர்தலில் மக்கள் வாக்குகள் அளித்தாலும் எலெக்டர்களின் வாக்குகளை பொறுத்தே ஒருவர் அதிபராக முடியும். அந்த வகையில் ட்ரம்ப்பை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு பல மாகாணங்களில் செல்வாக்குக் கூடியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Tags :