Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிரம்ப்-கிம் ஜாங் அன் இந்த ஆண்டு சந்தித்து பேச வாய்ப்பில்லை - வட கொரியா

டிரம்ப்-கிம் ஜாங் அன் இந்த ஆண்டு சந்தித்து பேச வாய்ப்பில்லை - வட கொரியா

By: Karunakaran Sat, 11 July 2020 7:49:36 PM

டிரம்ப்-கிம் ஜாங் அன் இந்த ஆண்டு சந்தித்து பேச வாய்ப்பில்லை - வட கொரியா

கடந்த 2018-ம் ஆண்டு சிங்கப்பூரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, கொரிய தீபகற்பம் அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றப்படும் என கிம் ஜாங் அன், டிரம்புக்கு உறுதி அளித்தார். அதன்பின், இருநாட்டு உறவில் நீண்டகாலமாக நிலவி வந்த பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் உருவானது.

இருநாட்டு உறவில்பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் உருவானபின், வடகொரியா தனது அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தியது. இதற்கு பதில் அமெரிக்கா தங்கள் மீது விதித்த பொருளாதார தடைகளை முழுமையாக திரும்பப்பெறும் என வடகொரியா எதிர்பார்த்தது. ஆனால் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடாத வரையில் பொருளாதார தடைகளை திரும்பப்பெற முடியாது என்பதில் அமெரிக்கா நிலைப்பாடாக இருந்தது.

trump,kim jong un,north korea,meeting ,டிரம்ப், கிம் ஜாங் உன், வட கொரியா, சந்திப்பு

அதன்பின், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வியட்னாமில் 2வது முறையாக இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசியபோதும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இரு நாடுகளின் உறவில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இருப்பினும் அணு ஆயுத விவகாரம் தொடர்பாக மீண்டும் 3வது சந்திப்பு நடைபெறும் என அமெரிக்கா தரப்பில் கூறியது. ஆனால் வட கொரியா இதனை தொடர்ந்து மறுத்து வருகிறது.

தற்போது கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோ ஜாங், 2 உயர்மட்ட தலைவர்களுக்கு இடையிலான முடிவை பொறுத்து ஆச்சரியமான விஷயம் இன்னும் நடக்கக் கூடும். இரு நாட்டு தலைவர்கள் இடையே நேரடி சந்திப்பு தேவைப்பட்டால், அது அமெரிக்காவின் தேவை. வடகொரியாவை பொறுத்தவரை அது நடைமுறைக்கு மாறானது. அதை எங்களுக்கு எந்த பலனையும் தராது என்று தெரிவித்துள்ளார்.



Tags :
|