டாபுக்கில் உள்ள 186 பள்ளிகளில் கல்வி கட்டணம் பாதியாக குறைப்பு
By: Karunakaran Wed, 19 Aug 2020 4:02:50 PM
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடந்த 8 மாதங்கள் ஆகியும் குறைந்தபாடில்லை. இதற்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் முழு ஊரடங்கு, தனிமனித இடைவெளி ஆகியவையே வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகளாக உள்ளன.
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா காரணமாக பல்வேறு நாடுகள் பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் சவுதி அரேபியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் வருகிறது.
சவுதி அரேபியாவின் வட பிராந்தியத்தில் டாபுக் மாகாணம் உள்ளது. அந்த மாகாணத்தின் கல்வி இயக்குனரகம், கொரோனா தாக்கத்தால் பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரிக்கட்ட முயற்சி மேற்கொண்டது. அதன்படி, டாபுக்கில் உள்ள 186 பள்ளிகள், நடப்பு கல்வியாண்டின் முதல் செமஸ்டர் கல்வி கட்டணத்தை பாதியாக குறைக்க சம்மதித்துள்ளன.
இதன் மூலம் 30 ஆயிரம் மாணவர்கள் பலன் அடைவார்கள். அவர்களின் பெற்றோருக்கு மொத்தம் 9 கோடி சவுதி ரியால் மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிப்படைந்து வருவது குறிப்பிடத்தக்கது.