Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜூன் 10-ம் தேதி சர்வதேச விமானச் சேவையை தொடங்குகிறது துருக்கி

ஜூன் 10-ம் தேதி சர்வதேச விமானச் சேவையை தொடங்குகிறது துருக்கி

By: Monisha Fri, 05 June 2020 12:17:43 PM

ஜூன் 10-ம் தேதி சர்வதேச விமானச் சேவையை தொடங்குகிறது துருக்கி

கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து நாடுகளுக்கு இடையேயான சர்வதேச விமானச் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று தொடர்ந்து நீடித்து வந்தாலும், பொருளாதாரச் சூழலைக் கருத்தில்கொண்டு பல நாடுகள் விமானச் சேவையை தொடங்கியுள்ளன.

இந்நிலையில், துருக்கி ஜூன் மாதத்தில் 40 நாடுகளுக்கு சர்வதேச விமானச் சேவையைத் தொடங்க உள்ளதாக கூறியுள்ளது. முதற்கட்டமாக இத்தாலி, சூடான், ஸ்பெயின், ஐக்கிய அரபு அமீரகம், அல்பேனியா, ஜோர்டன், மொராக்கோ உள்ளிட்ட 15 நாடுகளிடையே இருதரப்பு விமானச் சேவைக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

corona virus,june 10,international airlines,turkey ,கொரோனா வைரஸ்,ஜூன் 10-ம் தேதி,சர்வதேச விமானச் சேவை,துருக்கி

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆதில் கரைஸ்மெயிலோக்லு கூறுகையில், ''கொரோனா பரவலின் முக்கியக் கட்டத்தைக் கடந்துவிட்டோம். இனி உலக வர்த்தக உறவை, வணிகத்தைத் தொடர வேண்டும். தற்சமயம் 92 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்'' என்று தெரிவித்தார்.

துருக்கியில் இருந்து ஜூன் 10 அன்று வடக்கு சைப்ரஸ், பஹ்ரைன், பல்கேரியா, கத்தார், கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு விமானச் சேவை தொடங்கப்படும். அதைத் தொடர்ந்து ஜூன் 15 அன்று ஜெர்மனி, ஆஸ்திரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 17 நாடுகளுக்கும், ஜூன் 20, 22, 25 ஆகிய தேதிகளில் தென்கொரியா, நெதர்லாந்து, நார்வே, பெல்ஜியம் உள்ளிட்ட 16 நாடுகளுக்கும் விமானச் சேவை தொடங்கப்படும்.

துருக்கியில் இதுவரை 1.65 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,609 பேர் பலியாகியுள்ளனர்.

Tags :