Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

By: vaithegi Thu, 27 July 2023 1:02:05 PM

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்து உள்ள பனிமய மாதா கோவிலில் வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி தங்கத்தேர் திருவிழா நடைபெற இருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு .. உலகப் புகழ் பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் தங்கத் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கமாக இருந்து கொண்டு வருகிறது.

அதேபோன்று இந்தாண்டும் தூத்துக்குடி மாவட்டத்தின் 441வது திருவிழா மற்றும் பதினோராவது தங்கத்தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை மாதா கோவிலில் கொடியேற்றம் செய்யப்பட்டது. அதாவது, பக்தர்கள் கொடி மரத்திற்கு பால், மஞ்சள் ஊற்றி வேண்டுதல் நடத்தினர்.

holiday,thoothukudi ,விடுமுறை ,தூத்துக்குடி

இதையடுத்து இப்பனிமய மாதா பேராலயத்தின் முக்கிய நிகழ்வான தங்கத்தேர் பவனி திருவிழா வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் தங்கத்தேர் திருவிழாவை காண வரும் பக்தர்களின் வசதிக்காக கழிப்பறை. மருத்துவம், தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை என அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :