Advertisement

ட்விட்டர் நிறுவனத்திற்கு ரூ.2.89 கோடி அபராதம் விதிப்பு

By: Nagaraj Thu, 10 Aug 2023 7:56:53 PM

ட்விட்டர் நிறுவனத்திற்கு ரூ.2.89 கோடி அபராதம் விதிப்பு

நியூயார்க்: ட்விட்டர் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் ெளியாகி உள்ளது.

தேர்தல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் ட்விட்டர் பதிவுகளை வழங்காமல் தாமதம் ஏற்படுத்திய ட்விட்டர் நிறுவனத்துக்கு ரூ.2.89 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

twitter company,court,deadline,former president,colombia ,ட்விட்டர் நிறுவனம், நீதிமன்றம், காலக்கெடு, முன்னாள் அதிபர், கொலம்பியா

இந்த வழக்கின் விசாரணைக்காக முன்னாள் அதிபர் டிரம்பின் ட்விட்டர் பதிவுகளை வழங்க கோரி அந்நிறுவனத்துக்கு கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு முடிவடைந்து 3 நாட்கள் ஆன நிலையில் இன்னும் முழுமையான தகவல்களை அந்நிறுவனம் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|