ட்விட்டர் ... 2,000 பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல்
By: vaithegi Mon, 31 Oct 2022 8:19:30 PM
இந்தியா: ட்விட்டர் நிறுவனம் உலகின் முக்கிய பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரும் தங்கள் கருத்துக்களை பகிர உதவும் சமூக வலைதள செயலியாகும்.
இந்த நிறுவனத்தை மஸ்க் வாங்குவதற்கு முன்னதாக ஒப்பந்தங்கள் செய்யப்பட்ட நிலையில், இடையில் ஏற்பட்ட பிரச்சனைகளால் இந்த ஒப்பந்தத்தை மஸ்க் நிறுத்த நினைத்தார்.
ஆனால் ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்து அதை மஸ்க் வாங்கிக்கொள்ள செய்யப்பட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற சொன்னது.
இந்நிலையில், கடந்த வாரம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய மஸ்க், அதிரடியாக நிறுவனத்தின் CEO பராக் அகர்வால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை அதிரடியாக பணிநீக்கம் செய்தார். இந்த சம்பவம் இணைய உலகம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது.
இதேபோல், மேலும், 2,000 பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. மொத்தம் ட்விட்டர் நிறுவனத்தில் 7,000 பேர் பணியாற்றி வரும் நிலையில், இந்த 2,000 என்பது நிறுவனத்தில் கால்வாசி ஊழியர்களின் எண்ணிக்கையாகும் குறிப்பிடத்தக்கது.