ட்விட்டர் புதிய நிர்வாகத்தில் பெரும் குழப்பமான சூழல்... ஊழியர்கள் ராஜினாமா
By: Nagaraj Sat, 19 Nov 2022 1:01:04 PM
நியூயார்க்: தொடர்ந்து ஊழியர்கள் ராஜினாமா... ஊழியர்கள் பணி நீக்கம், தாமாகவே ராஜினாமா செய்யும் ஊழியர்கள் என்று எலன் மஸ்க் கைப்பற்றிய ட்விட்டரின் புதிய நிர்வாகத்தில் பெரும் குழப்பமான சூழல் காணப்படுகிறது.
பல அலுவலகங்கள் ஊழியர்கள் இல்லாமல் மூடப்பட்டுள்ளன. கடுமையாக உழைக்கத் தயாராக இல்லை என்றால் மூன்று மாத ஊதியத்துடன் பணியை விட்டு விலகுமாறு ஊழியர்களுக்கு எலன்மஸ்க் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து நிறைய ஊழியர்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல்
தங்கள் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்து வருகின்றனர். ட்விட்டர் தலைமை
அலுவலகத்திலும் பெரும் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.
இதேபோல்
எலான் மஸ்க் பணி நீக்கம் செய்த ஊழியர்கள் பலரும் கோர்ட்டில் வழக்குகள்
தொடர்ந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ட்விட்டர் அலுவலகம் பல
மூடப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி
உள்ளது.