- வீடு›
- செய்திகள்›
- ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் உத்தவ் தாக்கரே நிச்சயம் பங்கேற்பார் - சஞ்சய் ராவத்
ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் உத்தவ் தாக்கரே நிச்சயம் பங்கேற்பார் - சஞ்சய் ராவத்
By: Karunakaran Wed, 22 July 2020 11:42:19 AM
ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடக்கவுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் இயக்கத்தில் சிவசேனாவின் பங்கு மிக முக்கியமானது என்பதால், உத்தவ் தாக்கரே கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் கொள்கையில் முரண்பட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து சிவசேனா ஆட்சி அமைத்து உள்ள நிலையில் கூட்டணியில் ராமர் கோவில் விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இதுகுறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நிச்சயம் பங்கேற்பார். ஏனெனில் இந்த நிகழ்ச்சியுடன் சிவசேனா உணர்வுபூர்வமான, மதம் மற்றும் தேசிய உறவுகளை பகிர்ந்து கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் சிவசேனா மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளது. சிவசேனாவினர் ரத்தம் சிந்தி ராமர் கோவில் கட்டுமானத்திற்கு தியாகம் செய்துள்ளனர். இந்துத்வாவின் பார்வையில் இந்த விழா வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.