Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சோனியா காந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பங்கேற்கிறார்!

சோனியா காந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பங்கேற்கிறார்!

By: Monisha Fri, 22 May 2020 10:41:43 AM

சோனியா காந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பங்கேற்கிறார்!

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் 4-ம் கட்ட ஊரடங்கு உத்தரவு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கால் பெரும் பாதிப்புக்குள்ளானவர்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்களே.

இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சிரமங்கள் குறித்து விவாதிக்க மே 22-ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்திருந்தார்.

sonia gandhi,opposition caucus,uddhav thackeray,video conference,migrant workers ,சோனியா காந்தி,எதிர்க்கட்சிகள் கூட்டம்,உத்தவ் தாக்கரே,வீடியோ கான்பரன்ஸ்,புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

இந்த கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு சோனியா காந்தி தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடைபெறுகிறது. இதில் பல்வேறு காட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே பங்கேற்பார் என சிவசேனா கட்சி எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

ஆனால், சோனியா தலைமையில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

Tags :