Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உத்தவ் தாக்கரே கொரோனா பரவலுக்கு பின் எந்த இடத்திற்கும் செல்லவில்லை - சந்திரகாந்த் பாட்டீல்

உத்தவ் தாக்கரே கொரோனா பரவலுக்கு பின் எந்த இடத்திற்கும் செல்லவில்லை - சந்திரகாந்த் பாட்டீல்

By: Karunakaran Wed, 08 July 2020 12:15:18 PM

உத்தவ் தாக்கரே கொரோனா பரவலுக்கு பின் எந்த இடத்திற்கும் செல்லவில்லை - சந்திரகாந்த் பாட்டீல்

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. இந்நிலையில், மராட்டிய மாநில பாரதீய ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல்வீட்டில் இருந்து கொண்டு மாநிலத்தை ஆட்சி செய்ய முடியாது, களத்தில் வந்து மக்களை சந்திக்க வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், மராட்டியத்தில் ஒரு தலைவர் என்பவர் மன்னர் சத்ரபதி சிவாஜியை போல மக்களுக்கு தெரியவேண்டும். முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடந்த 1-ந்தேதி ஆஷாட ஏகாதசி திருவிழாவில் பங்கேற்க பண்டர்பூர் விட்டல்சாமி கோவிலுக்கும், மும்பையில் உள்ள சில கொரோனா சிகிச்சை மையங்களுக்கு மட்டுமே சென்று இருக்கிறார் என்று கூறினார்.

chandrakant patil,uddhav thackeray,coronavirus,corona spread ,சந்திரகாந்த் பாட்டீல், உத்தவ் தாக்கரே, கொரோனா வைரஸ், கொரோனா பரவல்

மேலும் அவர், மும்பையில் உள்ள சில கொரோனா சிகிச்சை மையங்களுக்கு மட்டுமே சென்றுஅவர் எந்த இடத்திற்கும் செல்லவில்லை. தனது வீட்டில் இருந்தே மாநிலத்தை ஆட்சி செய்ய முடியாது. தேவேந்திர பட்னாவிஸ் ஒவ்வொரு நாளும் பயணம் செய்து மக்களை சந்திக்கிறார். அவருக்கு மட்டும் கொரோனா வைரசை பற்றிய பயம் இல்லையா? நீங்கள் மக்கள் சேவை செய்கிறீர்கள் என்றால் உங்களால் வீட்டில் உட்கார முடியாது என்று கூறினார்.

களத்திற்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும் எனவும், முடியாவிட்டால், குறைந்தபட்சம் மாதோஸ்ரீ இல்லத்திலாவது மக்களை சந்திக்க வேண்டும் எனவும் மராட்டிய பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை சாடியுள்ளார்.

Tags :