இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு செலவுகள் விவரம் வெளியீடு
By: vaithegi Fri, 19 May 2023 10:56:50 AM
இங்கிலாந்து : இங்கிலாந்து ராணி எலிசெபத்தின் இறுதி சடங்கிற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 1,665 கோடி செலவாகியுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து ராணி எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கானது 10 நாட்கள் நடைபெற்றது . அவரது இறுதி சடங்கிற்கும் உலக நாடுகளை தலைவர்கள் பெரும்பாலானோர் வந்திருந்தனர். இதனால் லண்டனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் பலமாக இருந்தன.
இதனை அடுத்து ராணி எலிசபெத்தின் நல்லடக்கம் கடந்த ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெற்றது. இந்த 10 நாள் இறுதி சடங்கு செலவை இங்கிலாந்து அரசு வெளியிட்டு உள்ளது.
இதற்கான செலவு மொத்தமாக இந்திய ரூபாய் மதிப்பில் 1,665 கோடி என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராணி எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து அவரது மகன் 3-ஆம் சார்லஸ் அண்மையில் இங்கிலாந்து மன்னராக பதவி ஏற்றுக்கொண்டார்.