Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்யா அதிபர் மாளிகை மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்கியதாக உக்ரைன் மீது குற்றச்சாட்டு

ரஷ்யா அதிபர் மாளிகை மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்கியதாக உக்ரைன் மீது குற்றச்சாட்டு

By: Nagaraj Wed, 03 May 2023 11:55:37 PM

ரஷ்யா அதிபர் மாளிகை மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்கியதாக உக்ரைன் மீது குற்றச்சாட்டு

ரஷ்யா: உக்ரைன் மீது குற்றச்சாட்டு... ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான மோதல் இன்னும் தணியாத நிலையில், ரஷ்ய அரசின் மையமாக கருதப்படும் அதிபர் மாளிகை (கிரெம்ளின்) மீது உக்ரைன் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினைக் கொல்ல உக்ரைன் இந்தத் தாக்குதலை நடத்தியதாக ரஷ்ய அரசு வெளிப்படையாக குற்றம் சாட்டியது.

accusation,attack,drone,russian president,ukraine, ,உக்ரைன், குற்றச்சாட்டு, ட்ரோன், தாக்குதல், ரஷ்ய அதிபர்

கிரெம்ளின் வெளியிட்ட அறிக்கையில், கிரெம்ளினை குறிவைத்து இரண்டு ஆளில்லா ட்ரோன்கள் ஏவப்பட்டன. அதை ரஷ்ய பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். இது திட்டமிட்ட பயங்கரவாத சதி, ரஷ்ய அதிபர் புதினின் உயிருக்கு எதிரான தாக்குதல். இந்த தாக்குதலில் புதினுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

கட்டிடங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. உரிய நேரத்தில் பதிலடி கொடுக்க ரஷ்யாவுக்கு உரிமை உள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

யுத்தம் தொடங்கி ஒரு வருடத்திற்கு மேலாகியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. தாக்குதல் பற்றிய சமீபத்திய செய்திகள் இந்த மோதலின் போக்கை மட்டுமே வலுப்படுத்துகின்றன.

Tags :
|
|