Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இனி வரும் காலங்களில் வெப்ப அலைகள் தொடர்ந்து தீவிரமடையும் .. ஐநா எச்சரிக்கை

இனி வரும் காலங்களில் வெப்ப அலைகள் தொடர்ந்து தீவிரமடையும் .. ஐநா எச்சரிக்கை

By: vaithegi Wed, 19 July 2023 6:40:37 PM

இனி வரும் காலங்களில் வெப்ப அலைகள் தொடர்ந்து தீவிரமடையும்   ..   ஐநா எச்சரிக்கை

இந்தியா: உலகளவில் வெப்பம் அதிகரிப்பது குறித்து ஐநா எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளது. இதையடுத்து அதன் படி இனி வரும் காலங்களில் வெப்ப அலை நிகழ்வுகள் தொடர்ந்து தீவிரமடையும்.

எனவே அதை எதிகொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இயற்கை ஆபத்துகளில் வெப்ப அலைகள் மிகவும் மோசமான ஆபத்தாகும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் வெப்பத்தால் ஏற்படும் உடல் சோர்வால் உயிரிழக்கின்றனர்.

un,heat waves ,ஐநா ,வெப்ப அலைகள்

மேலும் வெப்ப அலைகளை தடுக்க கார்பன் எரிபொருள்களை நிறுத்த வேண்டும் என்றும் அனைத்தையும் மின்மயமாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வளர்ந்து வரும் நகர மயமாக்கல் காரணமாக வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது.

இந்த வெப்பம் அதிகரிப்பால் மனித ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரங்களில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பின், மூத்த வெப்ப ஆலோசகர் ஜான் நேர்ன் தெரிவித்து உள்ளார்.


Tags :
|