Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிவநேசத்துரை சந்திரகாந்தன் அபிவிருத்திக் குழு கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை

சிவநேசத்துரை சந்திரகாந்தன் அபிவிருத்திக் குழு கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை

By: Nagaraj Sat, 03 Oct 2020 3:06:27 PM

சிவநேசத்துரை சந்திரகாந்தன் அபிவிருத்திக் குழு கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை

சிக்கல் எழுந்துள்ளது... மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் அக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ் அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள நீதிமன்றத்தின் அனுமதி தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது காவலில் உள்ள சிவநேசத்துறை சந்திரகாந்தன் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என சிறைச்சாலை ஆணையர் சந்தன ஏகநாயக்க, தெரிவித்துள்ளார்.

development committee,prime minister,issue,chairman,meeting ,அபிவிருத்தி குழு, பிரதமர், சிக்கல், தலைவர், கூட்டம்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகஸ்ட் 10 ஆம் திகதி நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ முன்னிலையில் பதவியை பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tags :
|