Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் அனைத்து அலுவலர்களும் நாளை முதல் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என பொதுத்துறை அரசு துணைச் செயலாளர் அறிவிப்பு

தமிழகத்தில் அனைத்து அலுவலர்களும் நாளை முதல் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என பொதுத்துறை அரசு துணைச் செயலாளர் அறிவிப்பு

By: vaithegi Thu, 23 June 2022 6:14:47 PM

தமிழகத்தில் அனைத்து அலுவலர்களும் நாளை முதல் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என பொதுத்துறை அரசு துணைச் செயலாளர் அறிவிப்பு

தமிழகம்: தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் தொற்று 41 சதவீதமாக அதிகரித்து வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர். மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் 17 மாவட்டங்களில் 2 நாட்களாக நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும் அண்மையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மேலும் ஜூன் 12ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. எனவே தடுப்பூசி போடாதவர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

mask,vaccine,corona ,மாஸ்க் ,தடுப்பூசி ,கொரோனா

இந்நிலையில் தமிழகத்தில், நேற்று 20,227 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், சென்னையில் 345, செங்கல்பட்டில் 126, கோவையில் 55 உள்பட மொத்தம் 771 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,63,068ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 419 ஆக அதிகரித்துள்ளது. பெண்களின் எண்ணிக்கை 352 ஆக உள்ளது. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உள்ளது. இந்நிலையில், பொதுத்துறை அரசு துணைச் செயலாளர் எஸ்.அனு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘தமிழகத்தில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாலும், சில மாவட்டங்களில் நோய் தொற்று குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாலும், நோய்த் தொற்றின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பது அவசியம் என்பதாலும், அனைத்து அலுவலர்களும் 24-6-2022 (நாளை) முதல் கட்டாயமாக மாஸ்க் அணிந்து அலுவலகத்திற்கு வருமாறும் சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|