மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
By: Karunakaran Sun, 02 Aug 2020 7:21:53 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறார்.
டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதால், அமித்ஷா அங்குள்ள மருத்துவமனைகள் போன்றவற்றிற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இந்நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டதால், மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தாலும், கொரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.