Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடகாவில் முன்னதாக பிரச்சாரத்தை தொடக்கிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

கர்நாடகாவில் முன்னதாக பிரச்சாரத்தை தொடக்கிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

By: Nagaraj Sat, 31 Dec 2022 6:52:05 PM

கர்நாடகாவில் முன்னதாக பிரச்சாரத்தை தொடக்கிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

மாண்டியா: தேர்தல் பிரசாரம் தொடக்கம்... கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு பா.ஜ., தலைவர்கள் தற்போது பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் மோடி வரும் ஜனவரி மாதம் கர்நாடகாவில் பிரசாரத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

கர்நாடக மாநில பாஜக சார்பில் மண்டியாவில் நேற்று ஜனசங்கல்ப யாத்திரை மாநாடு நடைபெற்றது. இதில் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் வாரிசு அரசியல் செய்து வருகின்றன. அந்த கட்சிகள் ஊழலை நடத்துகின்றன.

bjp,karnataka,majority, ,
கர்நாடகம், பாஜக, பெரும்பான்மை, பிரசாரம், வெற்றி

இந்த 2 கட்சிகளும் ஊழலால் கர்நாடகாவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியுள்ளன. எனவே, வாரிசு அரசியலில் ஊழலில் இருந்து கர்நாடகத்தை விடுவிக்க வேண்டும். மாண்டியா மற்றும் மைசூர் பகுதியில் அந்த இரு கட்சிகளுக்கும் வாய்ப்பு அளித்துள்ளீர்கள்.

இந்த முறை பாஜகவை முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையில் கர்நாடகம் வளர்ச்சிப் பாதையில் செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|