Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நேபாள விமான விபத்துக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்

நேபாள விமான விபத்துக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்

By: Nagaraj Mon, 16 Jan 2023 6:57:17 PM

நேபாள விமான விபத்துக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்

புதுடில்லி: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டுவிட்டரில் நேபாள விமானம் விபத்துக்குள்ளான செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

நேபாளத்தின் புது டெல்லியைச் சேர்ந்த எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் 68 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் உட்பட 72 பேர் பயணம் செய்தனர்.

condolence,minister jaishankar,plane-crash, ,இரங்கல், ஜெய்சங்கர், விமான விபத்து

இந்த விமானம் நேபாளத்தில் உள்ள சுற்றுலா நகரமான பொக்காராவில் புதிதாக திறக்கப்பட்ட விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டது. அப்போது, விமானம் திடீரென தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விமானத்தில் 5 இந்தியர்களும் பயணம் செய்தனர். அவர்களின் நிலை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டுவிட்டரில் நேபாள விமானம் விபத்துக்குள்ளான செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

Tags :