Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் மத்திய அமைச்சர் சுவாமி தரிசனம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் மத்திய அமைச்சர் சுவாமி தரிசனம்

By: Nagaraj Sun, 12 June 2022 10:56:36 PM

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் மத்திய அமைச்சர் சுவாமி தரிசனம்

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் கோவில்களில் மத்திய தகவல் -ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகன், சுவாமி தரிசனம் செய்தார்.

மத்திய அரசின், எட்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகன், சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக மதுரை சென்றார். அப்போது, நாமக்கல், நாமகிரித் தாயார் உடனுறை நரசிம்மர் கோவில், ஆஞ்சநேயர் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.

union minister,swami darshan,namakkal,anjaneyar,public ,மத்தியஅமைச்சர், சுவாமி தரிசனம், நாமக்கல், ஆஞ்சநேயர், பொதுமக்கள்

அப்போது, ஆஞ்சநேயர் சுவாமிக்கு வேளாண் உள்ளிட்ட தொழில்கள் சிறந்து விளங்கும் வகையில், பச்சை ஆடை உடுத்தி, மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து, மத்திய அமைச்சரிடம், பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட அமைச்சர், மனுக்கள் மீது உரிய நடவடிகக்கை எடுப்பதாக கூறினார். பின், ப.வேலுார் அருகே குஞ்சாம்பாளையத்தில் உள்ள பெருமாள் சுவாமி வீரமாத்தியம்மன், கன்னிமார்கள், நல்லையன், சங்கிலி கருப்பன் சுவாமி கோவிலில், மத்திய இணை அமைச்சர் முருகன் சுவாமி தரிசனம் செய்தார்.

Tags :