Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கரோனா பாதித்தவர்கள் சிறிது காலத்துக்கு கடுமையான பணிகளை தவிர்க்க மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

கரோனா பாதித்தவர்கள் சிறிது காலத்துக்கு கடுமையான பணிகளை தவிர்க்க மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

By: vaithegi Tue, 31 Oct 2023 10:56:33 AM

கரோனா பாதித்தவர்கள் சிறிது காலத்துக்கு கடுமையான பணிகளை தவிர்க்க மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

புதுடெல்லி: கடும் வேலைகளை தவிர்க்க வேண்டும் ... கரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பை தடுக்க சிறிது காலத்துக்கு கடுமையான பணிகளை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்திவுள்ளார்.

குஜராத்தில் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடைய சிலர் சமீப காலமாகவே அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழந்தனர். அதிலும் குறிப்பாக, சவுராஷ்டிரா பகுதியில் இந்த உயிரிழப்பு அதிகமாக உள்ளது. கடந்த 22-ம் தேதி நவராத்திரி விழாவை முன்னிட்டு கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்த 17 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்தார்.

union minister,corona,tough job ,மத்திய அமைச்சர் ,கரோனா ,கடுமையான பணி


இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று முன்தினம் கூறும்போது, “இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஒரு விரிவான ஆய்வை நடத்தியது. கரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள்,

கடுமையாக உடற்பயிற்சி மற்றும் கடினமாக வேலை செய்வதை 2 ஆண்டுகளுக்கு தவிர்க்க வேண்டும் என்று அந்த ஆய்வு கூறுகிறது. எனவே இதன் மூலம் திடீர் மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்” என அவர் கூறினார்.

Tags :
|