- வீடு›
- செய்திகள்›
- பல்கலைக்கழகங்கள் விருப்பப்பட்டால் முதலாம், 2ஆம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் - உச்சநீதிமன்றம் அறிவிப்பு
பல்கலைக்கழகங்கள் விருப்பப்பட்டால் முதலாம், 2ஆம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் - உச்சநீதிமன்றம் அறிவிப்பு
By: Karunakaran Thu, 03 Sept 2020 9:56:47 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் கல்லூரி தேர்வுகள் நடத்த வேண்டும் என யுஜிசி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை கண்டிப்பாக நடத்த வேண்டும் என கூறப்பட்டது. ஆனால் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்வை நடத்த அனுமதி வழங்கியதுடன், தேர்வை எழுதாமல் பட்டங்களை வழங்கக்கூடாது என தெரிவித்தது
இந்நிலையில், வரும் 30ம் தேதிக்குள் தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்கும்படி பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தற்போது, முதலாம், இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளுக்கு எதிராக மாணவர்கள் அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பல்கலைக்கழகங்கள் விரும்பினால், முதலாம், இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வை நடத்தலாம் என்றும், யுஜிசி விதிகளுக்கு உட்பட்டு தேர்வை நடத்தலாம் என தெரிவித்துள்ளது.
மேலும், முதலாம், இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளுக்கு எதிராக மாணவர்கள் அமைப்பு தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களை தவிர அனைவருக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் எடப்பாடி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.