நாடாளுமன்ற பாதுகாப்பிற்கான ஆளில்லா விமானம் விபத்தில் சிக்கி நொறுங்கியது
By: Nagaraj Sun, 14 Aug 2022 4:26:41 PM
இலங்கை: நாடாளுமன்றத்தின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானம் தியவன்ன ஓயாவில் வீழ்ந்ததில் சுமார் ஐம்பது இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆளில்லா விமானம் இலங்கை விமானப்படைக்கு சொந்தமானது. கடந்த மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்ற நிகழ்வின் பாதுகாப்புக்காக விமானம் ஈடுபடுத்தப்பட்டிருந்த வேளையில் திடீரென தியவன்ன ஓயாவில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானத்தின் பற்றறி வலுவிழந்ததால் விபத்துக்குள்ளானதாக தற்போதைய
விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, விமானத்தை பத்திரமாக
தரையிறக்க விமானப்படை வீரர்கள் எவ்வளவோ முயன்றும் அது தோல்வியில்
முடிந்ததாக தெரியவந்துள்ளது.
தியவன்னாவையில் விபத்துக்குள்ளான ஆளில்லா விமானம் கடற்படையின் சுழியோடிகள் குழுவினரால் அண்மையில் மீட்கப்பட்டது.