மன் கி பாத் நிகழ்ச்சியில் உ.பி. மாணவன் உஸ்மான் சைப்பிடம் பேசிய பிரதமர் மோடி
By: Karunakaran Mon, 27 July 2020 10:59:18 AM
ஒவ்வொரு மாத கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். மேலும் மக்களிடமும் உரையாடுகிறார். இம்மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா பாதிப்பு, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் மற்றும் கார்கில் வெற்றி தினம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். பின்னர் பொதுமக்களுடனான உரையாடலின்போது உத்தர பிரதேசம் மாநிலத்தின் அமோஹா மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் உஸ்மான் சைப்பிடம் பிரதமர் மோடி பேசினார்.
இதுகுறித்து மாணவன் உஸ்மான் சைபி கூறுகையில், மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் பேசியதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அவருடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் என்னை வேத கணிதத்தை படித்து எனது நண்பர்களுக்கும் சொல்லிக் கொடுக்கும்படி அறிவுறுத்தினார் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
மாணவன் உஸ்மான் சைப், சிபிஎஸ்சி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றிருந்ததால், ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவரிடம் பேசினார். மேலும் முதல் மதிப்பெண் பெற்றிருந்ததை பிரதமர் மோடி பாராட்டினார்.