தொடர் விடுமுறை .. ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 30% வரை அதிகரிப்பு
By: vaithegi Sat, 12 Aug 2023 2:53:56 PM
சென்னை: இன்றும் , நாளையும் வார விடுமுறை என்பதாலும், செவ்வாய் கிழமை ( ஆகஸ்ட் 15) சுதந்திர தின விழாவை ஓட்டி அரசு விடுமுறை என்பதாலும் பலர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயத்தமாகி உள்ளனர்.
இதையடுத்து சொந்த ஊர்களுக்குச் செல்பவர்கள் வேலை நாளான திங்கள் கிழமைவிடுப்பு எடுத்துக்கொண்டு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறையில் ஊர்களுக்குச் செல்கின்றனர். எனவே இதனையொட்டி ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி கொண்டு வழிகிறது. சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகளின் முன்பதிவு இருக்கைகள் நிரம்பிவிட்டன.
மேலும் அத்துடன் ஆம்னி பேருந்துகளிலும் 90% இருக்கைகள் நிரம்பிவிட்டன. இந்த நிலையில் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், ஆம்னி பேருந்துகள் தங்களது கட்டணத்தை 30% உயர்த்தியுள்ளன.
அதைதொர்ந்து குளிர்சாதன வசதிகொண்ட அமர்ந்து செல்லும் பேருந்துகளில் ரூ. 2000 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், மதுரை, நெல்லைக்கு படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் ரூ.3000 முதல் ரூ.4000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர்.