- வீடு›
- செய்திகள்›
- நேற்று மாலை 4 மணி வரை 5 கோடி 'செல்பி' புகைப்படம் 'ஹர் கர் திரங்கா' இணையதளத்தில் பதிவேற்றம்
நேற்று மாலை 4 மணி வரை 5 கோடி 'செல்பி' புகைப்படம் 'ஹர் கர் திரங்கா' இணையதளத்தில் பதிவேற்றம்
By: vaithegi Tue, 16 Aug 2022 06:41:31 AM
புதுடெல்லி: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அனைவரின் வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி அவர்கள் கேட்டுக்கொண்டார். எனவே அதனை ஏற்று நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர தினத்தை கொண்டாடினர்.
இதற்கு இடையே மக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றியதை புகைப்படம் எடுத்தும், தேசிய கொடியுடன் 'செல்பி' புகைப்படம் எடுத்தும் 'ஹர் கர் திரங்கா' என்கிற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்படி மத்திய கலாசார அமைச்சகம் கேட்டுக்கொண்டது.
எனவே அதன்படி அப்படி பதிவேற்றம் செய்யும் நபர்களுக்கு அவர்களின் பெயர் மற்றும் முகவரியுடன் மத்திய அரசின் சார்பில் சான்றிதழ் ஒன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அதைத்தொடர்ந்து, பலரும் தங்கள் வீட்டில் ஏற்றிய தேசியக்கொடியை புகைப்படம் எடுத்தும், மேலும் தேசிய கொடியுடன் செல்பி புகைப்படம் எடுத்தும் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, சான்றிதழ் பெற்றனர்.
அதன் பின் அந்த சான்றிதழை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணி வரையில் 5 கோடி 'செல்பி' புகைப்படங்கள் 'ஹர் கர் திரங்கா' இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும், இது ஒரு மிக பிராமண்ட சாதனை என மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.