Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தனிமைப்படுத்தலை மீறுவோருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை; அதிபர் செபாஸ்டியன் எச்சரிக்கை

தனிமைப்படுத்தலை மீறுவோருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை; அதிபர் செபாஸ்டியன் எச்சரிக்கை

By: Nagaraj Fri, 19 June 2020 4:05:49 PM

தனிமைப்படுத்தலை மீறுவோருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை; அதிபர் செபாஸ்டியன் எச்சரிக்கை

சிலியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்
சிலியில் தனிமைப்படுத்தலை மீறுவோருக்கு 5 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அதிபர் செபாஸ்டியன் பினெரா எச்சரித்துள்ளார்.

சிலியில் கொரோனா தொற்றால் 2 லட்சத்து 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நோய் பரவலை தடுக்க 3 மாதத்துக்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

chile,corona,isolation,warning,imprisonment ,சிலி, கொரோனா, தனிமைப்படுத்தல், எச்சரிக்கை, சிறைதண்டனை

இதனால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில், தலைநகர் சாண்டியாகோவில் வாரத்தில் 5 முறைக்கு பதில் 2 முறை மட்டும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

போலீசாருடன் சேர்ந்து ராணுவத்தினரும் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தனிமைப்படுத்தலை மீறுவோருக்கு இந்திய மதிப்பில் 9 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில்தான் சிலி அதிபர் தனிமைப்படுத்தலை மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Tags :
|
|