Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க விமானப்படை தளத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டால் பரபரப்பு

அமெரிக்க விமானப்படை தளத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டால் பரபரப்பு

By: Nagaraj Wed, 08 Feb 2023 11:51:24 AM

அமெரிக்க விமானப்படை தளத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டால் பரபரப்பு

வாஷிங்டன்: விமானப்படை தளத்தில் துப்பாக்கிச்சூடு... அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தினார்.

ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில், அமெரிக்க அதிபர் பயணம் செய்யும் ஏர்ஃபோர்ஸ் ஒன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

andrews air force base,gun fire,mysterious person ,, ஆண்ட்ரூஸ் விமானப்படை, துப்பாக்கி சூடு, மர்ம நபர்

இந்நிலையில் விமான நிலையத்திற்குள் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து துப்பாக்கியால் சுட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் யாராவது கொல்லப்பட்டார்களா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

இதற்கு முன், 2016 மற்றும் 2021ல், விமான நிலையத்திற்குள் மர்ம நபர்கள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். நாட்டின் மிக முக்கியமான விமான நிலையத்திற்குள் துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags :