Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவுடனான மோதலில் இந்தியாவின் பக்கம் அமெரிக்க ராணுவம் நிற்கும் - வெள்ளை மாளிகை தகவல்

சீனாவுடனான மோதலில் இந்தியாவின் பக்கம் அமெரிக்க ராணுவம் நிற்கும் - வெள்ளை மாளிகை தகவல்

By: Karunakaran Wed, 08 July 2020 10:24:13 AM

சீனாவுடனான மோதலில் இந்தியாவின் பக்கம் அமெரிக்க ராணுவம் நிற்கும் - வெள்ளை மாளிகை தகவல்

லடாக் எல்லையில் கடந்த மாதம் 15-ஆம் தேதி இந்திய-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு எல்லையில் போர் மூளும் பதற்றம் நிலவியது. இருப்பினும் இருநாட்டு ராணுவ அதிகாரிகளின் தொடர் பேச்சுவார்த்தை காரணமாக எல்லையில் இருந்து சீன படைகள் விலகி கொண்டன. இந்நிலையில் இந்தியா-சீனா இடையிலான மோதல் குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மீடோஸ் பேட்டி அளித்துள்ளார்.

மார்க் மீடோஸ் பேட்டி அளித்தபோது, ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக் கொள்கிறோம். உலகத்தில் சீனாவோ, மற்ற நாடுகளோ தாங்கள்தான் சக்திவாய்ந்தவர் என்று சொல்லிக்கொண்டு, பிற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்க மாட்டோம். எந்த பிராந்தியத்திலும் இதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.

us military,india,china,white house ,அமெரிக்க இராணுவம், இந்தியா, சீனா, வெள்ளை மாளிகை

மேலும் அவர், சீனாவாக இருந்தாலும், அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டை ஆதரிக்க மாட்டோம். இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டாலும் நட்புறவின் பக்கம் அமெரிக்க ராணுவம் நிற்கும். அமெரிக்க ராணுவம் தொடர்ந்து வலுவாக நிற்கும். தெற்கு சீன கடல் பகுதிக்கு 2 விமானம் தாங்கி கப்பல்களை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. உலகிலேயே அமெரிக்காதான் இன்னும் வலுவான சக்தி என்பதை உலகம் அறிந்து கொள்வதற்காக இதை செய்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ராணுவத்துக்கு ஜனாதிபதி டிரம்ப் நிறைய முதலீடு செய்துள்ளார் என்றும், அமெரிக்க ராணுவ வீரர்களும், வீராங்கனைகளும் தினந்தோறும் தியாக உணர்வுடன் பணியாற்றி வருகிறார்கள் என்றும் மார்க் மீடோஸ் கூறியுள்ளார். இதன் மூலம், சீனாவுடனான மோதலில் இந்தியாவின் பக்கம் அமெரிக்க ராணுவம் நிற்கும் என அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags :
|
|