Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மெக்சிகோ எல்லைக்கு அதிக ராணுவ வீரர்களை அனுப்ப அமெரிக்கா நடவடிக்கை

மெக்சிகோ எல்லைக்கு அதிக ராணுவ வீரர்களை அனுப்ப அமெரிக்கா நடவடிக்கை

By: Nagaraj Thu, 04 May 2023 12:30:36 PM

மெக்சிகோ எல்லைக்கு அதிக ராணுவ வீரர்களை அனுப்ப அமெரிக்கா நடவடிக்கை

அமெரிக்கா: அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கை... மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்க நாட்டிற்குள் சட்டவிரோதமாக அகதிகள் நுழைவதைத் தடுக்க நடவடிகை எடுக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ நாட்டின் எல்லையிலிருந்து அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய தினமும் அகதிகள் முயற்சிக்கின்றனர்.

இதைத்தடுக்க அமெரிக்க ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்த நிலையில், அதிபர் ஜோ பைடன் ஆட்சியில்தான் அதிகளவில் அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

america,mexico,border,more troops,problem ,அமெரிக்கா, மெக்சிகோ, எல்லை, அதிக ராணுவ வீரர்கள், பிரச்னை

இந்நிலையில், மெக்சிகோ எல்லைக்கு அமெரிக்க ராணுவ வீரர்கள் 1500 பேரை அனுப்ப அதிபர் ஜோபைடன் முடிவெடுத்துள்ளார். ஏற்கனவே அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜோபைடன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், இப்பிரச்சனைக்கு முடிவு கட்ட கூடுதல் படையை மெக்சிகோவுக்கு அனுப்பியுள்ளார்.

தற்போது அனுப்பவுள்ள அமெரிக்க ராணுவ வீரர்கள் 90 நாட்கள் பணியில் ஈடுபடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|