Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அமெரிக்க அதிபர் இரங்கல்

ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அமெரிக்க அதிபர் இரங்கல்

By: Nagaraj Sun, 04 June 2023 2:25:48 PM

ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அமெரிக்க அதிபர் இரங்கல்

வாஷிங்டன்: இந்தியாவின் ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

trainwreck,heartbroken,indians,america,obituary ,ரெயில் விபத்து,  இதயம் நொறுங்கி விட்டது, இந்தியர்கள், அமெரிக்கா, இரங்கல்

ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். இரங்கல் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:

ரெயில் விபத்து செய்தியை அறிந்ததும் இதயமே நொறுங்கி விட்டது. இந்தியர்களுடன் அமெரிக்க மக்கள் துணை நிற்பதாக ஜோ பைடன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags :