Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவுக்கு வரும் செப்டம்பரில் வருகிறாராம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

இந்தியாவுக்கு வரும் செப்டம்பரில் வருகிறாராம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

By: Nagaraj Sat, 22 Apr 2023 8:18:38 PM

இந்தியாவுக்கு வரும் செப்டம்பரில் வருகிறாராம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

புதுடில்லி: இந்தியாவுக்கு வருகிறார்... அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் மாதம் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து தெரிவித்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உயரதிகாரி டொனால்ட் லூ, இந்தியா - அமெரிக்கா நல்லுறவிற்கு இந்தாண்டு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக இருக்கும் என்றார்.

priority,indians,us president,summit,participation ,முன்னுரிமை, இந்தியர்கள், அமெரிக்கா அதிபர், உச்சி மாநாடு , பங்கேற்பு

மேலும், செப்டம்பரில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதை பைடன் எதிர்நோக்கியுள்ளதாகவும், ஜி-20 உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, நடப்பாண்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு அமெரிக்கா விசா வழங்க உள்ளதாகவும், இதில் மாணவர்கள் மற்றும் ஐ.டி. துறையினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாகவும் டொனால்ட் லூ தெரிவித்துள்ளார்.

Tags :
|