உதகை மலை ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு
By: Nagaraj Thu, 08 June 2023 11:34:24 PM
மேட்டுப்பாளையம்: உதகை மலை ரயில் தடம் புரண்டதால் பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர்.
குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தடம்புரண்டது மலை ரயில். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மலை ரயிலின் கடைசி பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின
ரயில் தடம்புரண்டதை அடுத்து பயணம் செய்து கொண்டிருந்த 150 பேர் அங்கேயே இறக்கி விடப்பட்டனர். கீழே இறங்கிய சக்கரங்களை தண்டவாளத்தில் பொருத்தும் பணியில் இரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மலை ரயில் பெட்டியின் சக்கரங்கள் ஏன் தடம் புரண்டன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற் கொண்டுள்ளனர். ஏற்கனவே ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சதி திட்டம் இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியான நிலையில் மலை ரயில் விபத்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.