Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி இன்னும் ஒரு மாதத்தில் தயாராகி விடும் - அதிபர் டிரம்ப்

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி இன்னும் ஒரு மாதத்தில் தயாராகி விடும் - அதிபர் டிரம்ப்

By: Karunakaran Wed, 16 Sept 2020 2:10:48 PM

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி இன்னும் ஒரு மாதத்தில் தயாராகி விடும் - அதிபர் டிரம்ப்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டு பிடிப்பதில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் கொரோனா பரவலுக்கு மத்தியில் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலுக்கு முன்பாகவே கொரோனா தடுப்பூசியை கொண்டுவர அதிபர் டிரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மாதம் அதிபர் டிரம்ப் கூறுகையில், தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அக்டோபர் மாதத்தில் வந்து விடும் என்று தெரிவித்தார்.

vaccine,corona virus,president trump,america ,தடுப்பூசி, கொரோனா வைரஸ், அதிபர் டிரம்ப், அமெரிக்கா

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒரு மாதத்தில் தயாராகி விடும் என்று டிரம்ப் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், நாங்கள் தடுப்பூசியை போடுவதற்கு மிக நெருக்கமாக இருக்கிறோம். இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் தடுப்பூசி தயாராகி விடும். நீங்கள் உண்மையை அறிய விரும்பினால் முந்தைய நிர்வாகம் தடுப்பூசிக்கு ஒப்புதல்களை பெற பல ஆண்டுகளை எடுத்திருக்கும் என்று கூறினார்.

மேலும் அவர், தடுப்பூசி ஒப்புதலை நாங்கள் சில வாரங்களிலேயே பெற்றுள்ளதாக அறிவித்தார். அதிபர் தேர்தலுக்கு முன்பாக தடுப்பூசியை வெளியிட்டால் அது தனக்கு சாதமாக அமையும் என்று டிரம்ப் கருதுகிறார். தற்போது ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

Tags :