Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சோதனைகள் அனைத்தும் வெற்றி பெற்றால் செப்டம்பரில் தடுப்பூசி ரெடி!

சோதனைகள் அனைத்தும் வெற்றி பெற்றால் செப்டம்பரில் தடுப்பூசி ரெடி!

By: Monisha Mon, 18 May 2020 11:35:40 AM

சோதனைகள் அனைத்தும் வெற்றி பெற்றால் செப்டம்பரில் தடுப்பூசி ரெடி!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 212-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி லட்சக்கணக்கான மனித உயிர்களை பலி வாங்கி வருகிறது. தற்போதைய நிலவரப்படி உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிப்பு 5 மாதங்களை கடந்த நிலையில் இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. சமூக இடைவெளியைப் பேணுதல், முக கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மட்டுமே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து முதல் கட்டமாக நல்ல பலனை அளித்துள்ளது. இதுதொடர்பாக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

vaccine,university of oxford,london,alok sharma,coronavirus,research ,தடுப்பூசி,லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்,அலோக் சர்மா,கொரோனா வைரஸ்,ஆராய்ச்சி

நாம் கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்து கொரோனா வைரசை எதிர்கொள்வதற்கான திறனை பெற்றிருக்கும் அறிகுறிகள் தற்போது உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நுரையீரலை மிகத் தீவிரமாக பாதிக்கும் தன்மை கொண்டது. இந்த மருந்து குரங்குகளின் உடலில் செலுத்தப்பட்டபோது, கொரோனா வைரசால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை தடுத்து நிறுத்தி உள்ளது. அதேசமயம் இந்த மருந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தவில்லை.

கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான ஆராய்ச்சியில் முதற்கட்ட வெற்றி எட்டப்பட்டு இருக்கிறது. ஆனாலும், மனிதர்களிடம் முழுமையாக சோதிக்காத வகையில் மருந்தின் தன்மையை உறுதி செய்ய முடியாது. மனிதர்களுக்கு தடுப்பூசி செலுத்தி பார்க்கும் சோதனைகளின் முடிவு அடுத்த மாதத்திற்குள் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

vaccine,university of oxford,london,alok sharma,coronavirus,research ,தடுப்பூசி,லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்,அலோக் சர்மா,கொரோனா வைரஸ்,ஆராய்ச்சி

இந்த சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக இருந்தால் செப்டம்பர் மாதத்திற்குள் பிரிட்டனில் உள்ள 30 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக வர்த்தகத் துறை மந்திரி அலோக் சர்மா தெரிவித்துள்ளார்.

மேலும், மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மருந்து கண்டுபிடிக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. வெற்றிகரமான கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடிக்க முடியாமலும் போகலாம்’ என்றும் அவர் தெரிவித்தார்.

Tags :
|