Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போதை பொருள் விவகாரத்தில் நகை வியாபாரி வைபவ் ஜெயின் கைது

போதை பொருள் விவகாரத்தில் நகை வியாபாரி வைபவ் ஜெயின் கைது

By: Karunakaran Sun, 13 Sept 2020 4:48:46 PM

போதை பொருள் விவகாரத்தில் நகை வியாபாரி வைபவ் ஜெயின் கைது

தடை செய்யப்பட்ட போதைபொருட்களை பயன்படுத்தியது மற்றும் போதை பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கன்னட பிரபல நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, இவர்களது நண்பர்கள் ரவிசங்கர், ராகுல், போதை பொருள் விற்பனையாளர்கள் வீரேன் கண்ணா, தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த லோயம் பெப்பர் சம்பா, பிரதீக் ஷெட்டி, நயாஷ், பிரசாந்த் ரங்கா ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் 9 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கைதான ரவிசங்கரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது, நடிகை ராகிணி திவேதியுடன் சேர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டார். மேலும், கனகபுரா அருகே பண்ணை வீட்டில் நடந்த தொழில் அதிபர் மகள் பிறந்தநாள் விருந்திலும், பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்திலும் ராகிணி திவேதி, பெங்களூருவை சேர்ந்த நகை வியாபாரி வைபவ் ஜெயினுடன் சேர்ந்து தானும் போதைப்பொருட்களை பயன்படுத்தியதை ரவிசங்கர் ஒப்புக்கொண்டார்.

vaibhav jain,arrested,drug dealing,bengalore ,வைபவ் ஜெயின், கைது, போதைப்பொருள் வர்த்தகம், பெங்களூர்

இதனால் வைபவ் ஜெயினை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டினார்கள். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டு தனிமையில் இருந்து அவர், சிகிச்சை பெற்றதால் அவரை போலீசார் கைது செய்யவில்லை. தற்போது கொரோனாவில் இருந்து வைபவ் ஜெயின் மீண்டு விட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில் பெங்களூரு வயாலிகாவலில் உள்ள வீட்டில் வைத்து நேற்று அதிகாலை வைபவ் ஜெயினை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் இந்த வழக்கில் 5-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. போதை பொருள் விவகாரத்தில் பெங்களூருவை சேர்ந்த ஆதித்யா அகர்வால் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் இந்த வழக்கில் 6-வது குற்றவாளியாக ஆதித்யா அகர்வாலின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.



Tags :