Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய நிர்வாகிகள் நியமனத்தில் வைத்திலிங்கத்தின் தலையீடு

புதிய நிர்வாகிகள் நியமனத்தில் வைத்திலிங்கத்தின் தலையீடு

By: Nagaraj Fri, 29 July 2022 5:07:01 PM

புதிய நிர்வாகிகள் நியமனத்தில் வைத்திலிங்கத்தின் தலையீடு

சென்னை: அ.தி.மு.க-வில் பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையிலான பஞ்சாயத்து செம சூடாகி வரும் நிலையில் வைத்திலிங்கம் பரவலாக தன் ஆதரவாளர்களுக்கு பதவி கொடுக்கிறார் என்ற பேச்சும் செம ஹாட்டாகி வருகிறது.

ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில், ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகிய நான்கு பேரையும் கட்சியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன், கே.பி.முனுசாமி உள்ளிட்ட 22 பேரை அ.தி.மு.க-விலிருந்து நீக்குவதாக அறிவித்தார் பன்னீர்செல்வம்.

இப்படி மாறி மாறி பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அ.தி.மு.க-வினரைக் கட்சியிலிருந்து நீக்கியும், புதிய நிர்வாகிகளை நியமித்தும் வருகிறார்கள். அந்தவகையில், அ.தி.மு.க-வின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கத்தை நியமித்திருக்கிறார் பன்னீர்.

 ,
தலையீடு, மூத்தநிர்வாகிகள், வைத்திலிங்கம், கூட்டம், வெளியேறினர்

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்திருக்கும் பன்னீர், தன் சென்னை வீட்டில் ஓய்வு எடுத்துவரும் நிலையில், புதிய நிர்வாகிகள் நியமனத்தில் வைத்திலிங்கத்தின் தலையீடு மேலோங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னை மயிலாப்பூரிலுள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்திலிங்கம் தலைமையில் ஒரு ரகசியக் கூட்டம் நடைபெற்றிருப்பதும், நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக அதில் பேசப்பட்ட விஷயங்களும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. உடல்நிலை சரியில்லாமல் பன்னீர் ஓய்வில் இருப்பதால், புதிய நிர்வாகிகள் நியமனத்தை இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற வகையில் வைத்திலிங்கம்தான் கவனிக்கிறார். டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பொறுப்புகளில் தனது ஆதரவாளர்களை நியமிப்பது குறித்துத் திட்டமிடுகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

நட்சத்திர ஹோட்டலில் நடந்த சந்திப்பில், புதிய பொறுப்புகளை எதிர்பார்க்கும் நகர, வட்ட, பேரூர், ஒன்றியக் கழக நிர்வாகிகள் பலரும், வைத்திலிங்கத்தின் காலில் விழுந்து வணங்கினர். அவர்களின் மரியாதையை புன்சிரிப்புடன் வைத்திலிங்கமும் ஏற்றுக்கொண்டார். இது கட்சியின் சில சீனியர்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்திவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சில மூத்த நிர்வாகிகள் அந்தக் கூட்டத்திலிருந்து வெளியேறிவிட்டனர் என்றும் தெரிய வந்துள்ளது.

Tags :