Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லாரி மீது வேன் மோதி விபத்து: சம்பவ இடத்திலேயே டிரைவர்-கிளீனர் பலி

லாரி மீது வேன் மோதி விபத்து: சம்பவ இடத்திலேயே டிரைவர்-கிளீனர் பலி

By: Monisha Thu, 05 Nov 2020 10:03:52 AM

லாரி மீது வேன் மோதி விபத்து: சம்பவ இடத்திலேயே டிரைவர்-கிளீனர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு பூக்கள் ஏற்றிக் கொண்டு வேன் கொண்டிருந்தது. இந்த வேன், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் தனியார் மில் அருகே நேற்று அதிகாலை 3 மணியளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் ஒரு லாரி காய்கறி ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த வேன், லாரியை முந்த முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறம் மோதியது.

மோதிய வேகத்தில் வேனின் முன்புறம் லாரியின் அடிப்பகுதியில் சிக்கி முன்புறம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் வேனை ஓட்டி வந்த ஓசூரை சேர்ந்த டிரைவர் சேகர் (வயது 38), தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த கிளீனர் சாம்ராஜ் (வயது 45) ஆகியோர் படுகாயம் அடைந்து இருக்கையிலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

truck,van,accident,driver,cleaner ,லாரி,வேன்,விபத்து,டிரைவர்,கிளீனர்

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், திருமங்கலம் டவுன் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் தகவல் கிடைத்து விரைந்து வந்த திருமங்கலம் தீயணைப்பு துறையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு துறையினர் ஜெயராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 4 பேர் சுமார் 1 மணி நேரம் போராடி இடிபாடுகளில் சிக்கி இருக்கையில் பிணமாக கிடந்த 2 பேரின் உடலை மீட்டனர். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
|
|
|